இளம்பெண்ணை கற்பழிக்கும் நேரடி காட்சியை பேஸ்புக்கில் ஏற்றிய நபர்கள்

பிரான்ஸ் நாட்டில் இளம்பெண் ஒருவரை 2 வாலிபர்கள் கூட்டாக கற்பழித்த நேரடி காட்சியை பேஸ்புக்கில் ஏற்றியதை தொடர்ந்து பொலிசார் இருவரையும் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சமூக வலைத்தளமான Snapchat-ல் பரபரப்பான ஒரு வீடியோ பதிவேற்றப்பட்டது. அதில், 19 வயதான ஒரு இளம்பெண்ணை 2 வாலிபர்கள் கூட்டாக கற்பழிக்கும் கொடூரமான காட்சிகள் இடம்பெற்று இருந்தன. போதையில் உள்ள அந்த பெண்ணிண் விருப்பம் இல்லாமல், இருவரும் கொடூரமாக கற்பழிப்பதை அந்த பெண்ணால் தடுக்க முடியாமல் மயக்க நிலைக்கு செல்கிறார். சுமார் 5 நிமிடங்கள் பதிவாகியுள்ள இந்த வீடியோ பின்னர் சமூக வலைத்தளமான பேஸ்புக்கிலும் பதிவேற்றப்பட்டது. ...

இந்த இரக்கமற்ற காட்சியை கண்டு அதிர்ச்சியுற்ற இணையதளவாசிகள் உடனடியாக பொலிசாருக்கு புகார் அளித்தனர். விரைந்து செயல்பட்ட பொலிசார் நேற்று காலை நேரத்தில் அந்த வீடியோவை இணையத்தளங்களில் இருந்து நீக்கினர். மேலும், இரண்டு வாலிபர்களின் தகவல்களை சேகரித்த பொலிசார் தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

 பிரான்ஸ்-ஸ்பெயின் எல்லையில் உள்ள Perpignan என்ற நகரில் கற்பழிப்பில் ஈடுப்பட்ட நபர்கள் இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து, விரைந்து சென்ற பொலிசார் 20 வயதுடையை இருவரையும் அதிரடியாக கைது செய்தனர். பிரான்ஸ் நாட்டில் பெரும் கொந்தளப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்திற்கு அந்நாட்டு பெண்கள் நல அமைப்புகள் கடுமையான கண்டனங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது