வெளியே வரப்போகும் இறுதிபோர் ஆவணங்கள் அச்சத்தில் அரசியல் தலமை !

போரின் இறு­திக்­கட்­டத்தில் படை­யி­ன­ரிடம் சர­ண­டைந்து காணா­மற்­போனோர் தொடர்­பான விவ­கா­ரத்தில், புதி­ய­தொரு திருப்­ப­மாக, இரா­ணு­வத்தின் 58ஆவது டிவி­ச­னிடம், சர­ண­டைந்­த­வர்கள் தொடர்­பான பட்­டியல் ஆவணம் ஒன்று இருப்பதாக நீதி­மன்­றத்தில் ஒப்­புக்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கி­றது.

 கடந்த புதன்­கி­ழமை முல்­லைத்­தீவு நீதி­மன்­றத்தில், இடம்­பெற்ற விசா­ர­ணையின் போது, 58ஆவது டிவி­சனின் கட்­டளை அதி­கா­ரி­யான மேஜர் ஜெனரல் கே.சி.குண­வர்­தன, குறுக்கு விசாரணையின் போது இந்தப் பட்­டியல் தமது டிவிசன் தலைமை­ய­கத்தில் இருப்­ப­தாகத் தெரி­வித்­துள்ளார். விடு­தலைப் புலி­களின் திரு­கோ­ண­மலை அர­சியல் பொறுப்­பா­ள­ராக இருந்த எழிலன் எனப்­படும், சின்­னத்­துரை சசி­தரன், கந்­தம்மான் எனப்­படும் பொன்­னம்­பலம் கந்­த­சாமி, 

உருத்­தி­ர­மூர்த்தி கிருஷ்­ண­குமார் மற்றும் மஜித் எனப்­படும் நடேசு முர­ளி­தரன் அவ­ரது மனைவி கிருஷ்­ண­கு­மாரி, 4 வயது மகன் சாருஜன், 2 வயது மகள் அபிதா ஆகியோர் தொடர்­பான, ஆட்­கொ­ணர்வு மனுக்கள் தொடர்­பாக நடத்­தப்­படும் விசா­ர­ணை­க­ளி­லேயே இந்தப் பட்­டியல் விவ­காரம் வெளிச்­சத்­துக்கு வந்­தி­ருக்­கி­றது. வவு­னியா மேல் நீதி­மன்­றத்தில் நடத்­தப்­பட்டு வந்த இந்த ஆட்­கொ­ணர்வு மனுக்கள் மீதான விசா­ர­ணையை இரா­ணு­வத்­த­ரப்பு முன்னர் இழுத்­த­டித்து வந்­தது. பின்னர், இந்தச் சம்­பவம் இடம்­பெற்ற முல்­லைத்­தீவு நீதி­மன்­றத்­துக்கு இது­பற்றி விசா­ரித்து அறிக்கை தரும்படி மேல்­நீ­தி­மன்­றினால் பணிக்­கப்­பட்­டது.



 அதற்­க­மைய முல்­லைத்­தீவு நீதி­மன்­றத்தில் நடத்­தப்­பட்டு வரும் விசா­ர­ணை­களில், 58ஆவது டிவிசன் கட்­டளை அதிகாரி மேஜர் ஜெனரல் கே.சி.குண­வர்­தன நேரில் முன்­னி­லை­யாகி, போரின் இறு­தியில் தமது படைப்­பி­ரி­விடம் சரணடைந்தவர்கள் தொடர்­பான பட்­டியல் ஆவணம் தம்­மிடம் இருப்­ப­தா­கவும், ஆட்­கொ­ணர்வு மனுக்­களில் கூறப்பட்டுள்ள ஏழு­பேரும் அந்தப் பட்­டி­யலில் இல்லை என்றும் அவர் கூறி­யி­ருக்­கிறார். இதன் பின்­னரே, அந்த ஆவ­ணத்தை நீதி­மன்­றத்­திடம் ஒப்­ப­டைக்க வேண்டும் என்று மனு­தா­ரரின் சட்­டத்­த­ரணி கோரிக்கை விடுத்­தி­ருக்­கிறார்.

 ஆனால், அதற்கு அர­ச­த­ரப்பு சட்­டத்­த­ரணி எதிர்ப்புத் தெரி­வித்த போதிலும், நீதி­பதி அதனை நிரா­க­ரித்து, எதிர்­வரும் ஏப்ரல் 19ஆம் திகதி நடத்­தப்­படும் விசா­ர­ணையில் அந்தப் பட்­டி­யலை சமர்ப்­பிக்க வேண்டும் என்று உத்­த­ர­விட்­டுள்ளார். இது­வ­ரைக்கும், போரின் இறு­தியில் சர­ண­டைந்­த­வர்கள் பற்­றிய ஒரு பட்­டியல் இருப்­பது பற்றி எந்­த­வொரு சந்தர்ப்பத்திலும் இரா­ணு­வத்­த­ரப்­பினால் ஒப்­புக்­கொள்­ளப்­பட்­டி­ருக்­க­வில்லை. போரின் இறு­தியில் சுமார் 12 ஆயிரம் புலிகள் சர­ண­டைந்­தனர். 

அவர்­களில், கடு­மை­யான குற்­றங்­களைச் செய்த சுமார் 300 பேர் தவிர, ஏனை­ய­வர்கள் விடு­விக்­கப்­பட்டு விட்­டனர் என்றே இரா­ணுவத் தரப்பும், அர­சாங்கத் தரப்பும் கூறி­வந்­தன. இப்­போது தான், தம்­மிடம் சர­ண­டைந்­த­வர்­களின் பட்­டியல் ஆவணம் உள்­ளது என்­பதை ஒப்­புக்­கொண்­டி­ருக்­கி­றது, 58ஆவது டிவிசன். இறு­திக்­கட்டப் போரில் மிகவும் முக்­கிய பங்­காற்­றிய இந்த டிவிசன் இப்­போது, பூசாவைத் தலை­மை­யி­ட­மாகக் கொண்டு செயற்­ப­டு­கி­றது. மன்­னாரில் உயி­லங்­கு­ளத்தில் இருந்து, முல்­லைத்­தீவில் முள்­ளி­வாய்க்கால் வரை இந்தப் படைப்­பி­ரிவு, விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான இறு­திப்­போரில் கணி­ச­மான பங்கை வகித்­தி­ருந்­தது. ஆரம்­பத்தில் அதி­ர­டிப்­படை 2 என்ற பெயரில், அரை டிவி­ச­னாக இயங்­கிய இந்தப் படைப்­பி­ரிவு, போரின் இறுதிக்கட்டத்தில், முழு­மை­யான டிவி­ச­னாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டது

. மன்னார் தொடக்கம், முல்­லைத்­தீவு வரை போரை நடத்திச் சென்ற இந்த டிவி­சனின் கட்­டளை அதி­கா­ரி­யாக இருந்­தவர் தான், மேஜர் ஜெனரல் சவேந்­திர சில்வா. விடு­தலைப் புலி­களின் அர­சி­யல்­துறையைச் சேர்ந்த நடேசன், புலித்­தேவன் போன்­ற­வர்கள் வெள்­ளைக்­கொ­டி­யுடன் இவரது படைப்­பி­ரி­வி­டமே சர­ண­டைந்­த­தாகக் கூறப்­ப­டு­கி­றது.

 இவர்கள் சர­ண­டை­ய­வில்லை என்றும் போரில் கொல்லப்பட்­ட­தா­கவும் இரா­ணுவத் தரப்பு கூறு­கி­றது. எவ்­வா­றா­யினும், இந்த விவ­கா­ரத்தில், கஜபா படைப்­பி­ரிவு அதி­கா­ரி­யான மேஜர் ஜெனரல் சவேந்­திர சில்வா மீது குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்டு வரு­கின்­றன. முன்­னைய அர­சாங்கம், இவ­ருக்கு அதிக கௌர­வத்தை வழங்­கி­ய­துடன், ஐ.நா.வுக்­கான பிரதி நிரந்­தர வதி­விடப் பிர­தி­நி­தி­யா­கவும் நிய­மித்­தி­ருந்­தது.

 அந்தப் பத­விக்­காலம் முடிந்த பின்னர், அவரை தென்­னா­பி­ரிக்­கா­வுக்­கான தூது­வ­ராக நிய­மிக்க முன்­னைய அர­சாங்­கத்­தினால் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­ட­போதும், அதற்கு அந்த நாட்டு அர­சாங்கம் இணங்­க­வில்லை.