இழுபறி நிலையில் இருந்த முடிவு முஸ்லீம் மக்களை பாதிக்குமா? ஆம் மைத்திர்க்கே ஆதரவு.மு.கா

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சி எதிரணி பொது வேட்பாளர்
மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் என ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் அக் கட்சியில் கடந்த காலங்களில் குழப்ப நிலை நீடித்து வந்தது. 

பலமுறை கூடிய ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர்களின் கூட்டம் இணக்கப்பாடின்றி முடிவுக்கு வந்த நிலையில், தற்போது மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கப் போவதாக அந்தக் கட்சி அறிவித்துள்ளது. 

தற்போது இடம்பெற்றுவரும் ஊடகவிலயாளர் சந்திப்பிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.