ஆயுதக் களஞ்சியசாலை திறக்கப்பட்டது

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள ரக்ன அக்கார தனியார் பாதுகாப்பு சேவையின் ஆயுதக்களஞ்சியத்தை பொலிஸார் சற்றுமுன்னர் திறந்துள்ளனர். 

அங்கு மறைத்துவைக்கப்பட்டுள்ள கொள்கலன்களில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் அவற்றை கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பயன்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தததாகவும் வாழைத்தோட்ட பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

மாநாட்டு மண்டப வளாகத்தில் ரக்ன அக்கார தனியார் பாதுகாப்பு சேவைக்கு சொந்தமான 23 கொள்கலன்கள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.