கல்முனை தொடக்கம் மட்டக்களப்பு வரை வெள்ளம் !


மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை முதல் கடும் மழை பெய்து வருகின்றது. 


இன்று காலை 8.30 மணிமுதல் 11.30 மணி வரையான 3 மணிநேரத்தில் 24.8 மில்லி லீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகரி கே.மூரியகுமார் தெரிவித்ததர். 

தொடராக பெய்துவரும் அடை மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 

வீதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. 

காத்தான்குடி ஏறாவூர் மட்டக்ளகளப்பு ஆரையம்பதி வாகரை  முதல் களுதாவளை மற்றும் கல்முனை வரையான பிரதேங்களில் பெள்ளம் பல பிரதேச செயலகப் பிரிவுகளில் கடும் மழை பெய்துவருவதாக வானிலை அவதான மையம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை செவ்வாய் காலை 8.30 மணிமுதல் புதன் காலை 8.30 மணிவரையான கடந்த 24 மணிநேரத்தில் 53.6 மில்லிலீற்றர் மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை அவதான மையம் தெரிவித்துள்ளது.