தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்­பட்­ட­போது மகிழ்ச்சி பர­வ­சப்பட்ட இரா.சம்­பந்தன்!! -(வீடியோ)




கொழும்பு காலி முகத்­தி­டலில் நேற்று கொண்­டா­டப்­பட்ட நாட்டின் 68 ஆவது தேசிய சுதந்­திர தின விழாவில் தேசிய கீதம் சிங்­களம் மற்றும் தமிழ் மொழி­களில் பாடப்­பட்­ட­மை­யா­னது அனை­வ­ரையும் கவர்ந்த விட­ய­மாக அமைந்­தது. அத்­துடன் தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்­பட்­ட­போது நிகழ்வில் கலந்­து­கொண்­டி­ருந்த எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் மகிழ்ச்சி பர­வ­சத்­துடன் உணர்ச்­சி­வ­சப்­பட்ட நிலையில் காணப்­பட்டார். 

 ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நடை­பெற்ற நேற்­றைய சுதந்­திர தின நிகழ்வில் முதலில் சிங்களத்தில் தேசியக் கீதம் இசைக்­கப்­பட்­டது. பின்னர் நிகழ்வு நிறை­வு­றும்­போது தேசியக் கீதம் தமிழில் இசைக்கப்பட்டது. இந்­நி­லையில் முதலில் சிங்­க­ளத்தில் மட்டும் தேசியக் கீதம் இசைக்­கப்­பட்­ட­போது நிகழ்வில் கலந்­து­கொண்­டி­ருந்த தமிழ் பேசும் தலை­வர்கள் முகம் சுளித்­துக்­கொண்­டி­ருந்­த­துடன் நேரடி ஒளி­ப­ரப்பை பார்த்த பொது மக்­களும் உற்­சாகம் இழந்­தனர். 

 எனி்னும் நிகழ்வின் இறு­தியில் கொழும்பு இரா­ம­நாதன் இந்து மகளிர் கல்­லூரி மாண­விகள் தேசியக் கீதத்தை தமிழ் மொழியில் இசைத்­தனர். இத­னை­ய­டுத்து நிகழ்வில் கலந்­து­கொண்­டி­ருந்த எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா. சம்­மந்தன் மற்றும் மலை­யக கட்­சி­களின் பிர­தி­நி­திகள் முகங்கள் பிர­கா­சித்­ததை அவ­தா­னிக்க முடிந்­தது. தேசிய கீதம் தமிழ் மொழியில் இசைக்­கப்­பட்­ட­போது நிகழ்வில் கலந்­து­கொண்­டி­ருந்த எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா. சம்­மந்தன் மகிழ்ச்சி பர­வ­சத்­துடன் உணர்ச்­சி­வ­சப்­பட்ட நிலையில் காணப்­பட்டார்.

 மேலும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க ஆகி­யோரின் முகங்­க­ளிலும் மகிழ்ச்சி கரை­பு­ரண்­டோ­டி­யதை அவ­தா­னிக்க முடிந்­தது. அத்­துடன் 68 ஆவது தேசிய சுதந்­திர தின நிகழ்­வு­களின் நேரடி ஒளி­ப­ரப்­புக்­களை பார்த்­துக்­கொண்­டி­ருந்த மக்கள் மத்­தி­யிலும் தேசிய கீதம் தமிழில் இசைக்­கப்­பட்­ட­போது பர­வசம் ஏற்­பட்­டதை அவ­தா­னிக்க முடிந்­தது. நாட்டில் 1949 ஆம் ஆண்டு கொண்­டா­டப்­பட்ட முத­லா­வது தேசிய சுதந்­திர தினத்தில் தமி­ழிலும் தேசியக் கீதம் இசைக்கப்பட்­டது.

 அதன் பின்னர் சில சந்­தர்ப்­பங்­களில் தேசியக் கீதம் தமிழில் இசைக்­கப்­பட்­டது. ஆனால் கடந்த பல தசாப்­தங்­க­ளாக தேசியக் கீதம் சுதந்­திர தின நிகழ்வில் இசைக்­கப்­ப­ட­வில்லை. அந்­த­வ­கையில் நேற்­றைய தினமே இவ்­வாறு தேசியக் கீதம் தமிழில் இசைக்­கப்­பட்­டமை விசேட அம்­ச­மாகும். மேலும் தமிழில் தேசியக் கீதம் இசைக்­கப்­ப­டு­வ­தற்கு ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யி­னரும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவும் கடும் எதிர்ப்பு வெளியிட்­டி­ருந்த நிலை­யிலும் சுதந்­திர தின நிகழ்வில் தேசியக் கீதம் இசைக்­கப்­பட வேண்டும் என்ற தீர்மானத்தை அரசாங்கம் எடுத்திருந்தது.

 68 ஆவது சுதந்திர தின நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதம நீதியரசர் சபாநாயகர் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முப்படை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.