கல்முனை நகருக்கான போக்குவரத்துச் சேவை ஆரம்பம்

களுவாஞ்சிடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட துறைநீலாவணைக் கிராமத்துக்கு கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரின் துரிதமுயற்சியினால் இலங்கை போக்குவரத்து பஸ் சேவை, இன்று சனிக்கிழமை (06) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

துறைநீலாவணை கிராமத்தில் இருந்து காலை ஏழு மணிக்கு புறப்பட்டு எட்டு மணிக்கு கல்முனை நகரத்தை சென்றடையும். அங்கிருந்து காலை பத்து மணிக்கு மீண்டும் துறைநீலாவணை கிராமத்துக்கு சென்றடையும் என இலங்கை போக்குவரத்துச்சபையின் கிழக்கு பிராந்திய பணிப்பாளர் ஏ.எல்.சித்தீக் தெரிவித்தார். 

 .அதிக தொகை முச்சக்கர வண்டிக்கு கொடுத்து வறுமைக்கோட்டின் கீழ் வாழும் எங்களுக்கு இது ஒரு வரவேற்கதக்க விடயமாகும். வெற்றிலை விற்று அதில்கிடைக்கும் வருமானத்தில் முச்சக்கர வண்டி சாரதிகள் அதிக பணத்தை வசூல் பண்ணுகின்றனர். கல்முனைக்கு செல்வதற்கு ஐம்பது ரூபாய் பறிக்கின்றனர். ஆனால் இ.போ.ச.பஸ்ஸில் செல்வதற்கு பதினெட்டு ரூபாய் மட்டும் அறவீடு செய்கின்றனர். இதனால் மேலதிகமாக எங்களால் முப்பது ரூபாய் தற்போது சேமிக்க முடியும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.