ஓடும் ரெயிலில் சிறுமிக்கு மது ஊற்றிக் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ வீரர்கள்

ஓடும் ரெயிலில் 14 வயது சிறுமிக்கு மது ஊற்றிக் கொடுத்து ராணுவ வீரர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 கடந்த திங்கள் அன்று ஹவ்ரா-அமிர்தசரஸ் ரெயிலில் பயணம் செய்த தன் மகளைக் காணவில்லை என்று அந்த சிறுமியின் தந்தை ரெயில்வே போலீசில் கொடுத்த புகாரின் பேரில், சிறுமியை தேடிய போலீசார் அச்சிறுமியின் கோலத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தனக்கு நடந்த கொடூரம் குறித்து ரெயில்வே போலீசாரிடம் அந்த சிறுமி அளித்துள்ள வாக்குமூலத்தில், ரெயில் பயணத்தின் போது ஒரு ராணுவ வீரர் தனக்கு வலுக்கட்டாயமாக மது ஊற்றிக் கொடுத்ததாகவும் 2 பேர் தன்னை பலாத்காரத்திற்கு ஆட்படுத்தியதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். 

 உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய போலீசார் மது ஊற்றிக் கொடுத்த ராணுவ வீரரை கைது செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள 2 ராணுவ வீரர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.