வெளிநாட்டில் இருந்து வந்த கிழட்டு மன்மதராசா யாழ் கொட்டடியில் சிறுமி மீது பாலியல் வல்லுறவு

யாழ்.கொட்டடி பகுதியில் பாடசாலை சிறுமி ஒருவரை வீட்டுக்குள் இழுத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்ய முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 யாழ்.கொட்டடி -குளியாவடி பகுதியில் இன்றைய தினம் மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் சிறீகஜன் மேலும் தெரிவிக்கையில். மேற்படி பகுதியில் மாலை 6 மணிக்கு தனியார் கல்வி நிலையத்திற்கு சென் று திரும்பிய 10வயது சிறுமி ஒருவரை ஜேர்மன் குடியுரிமை பெற்ற இருவரே சிறுமிக்கு ஆசை வார்த்தைகள் பேசி வீட்டுக்குள் அழைத்துள்ளனர். பின்னர் அந்த சிறுமியுடன் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்ற நிலையில் சிறுமி கூச்சலிட்டுள்ளார். 

இதனையடுத்து குறித்த இரு நபர்களும் சிறுமியை சமாளித்து 70ரூபா பணத்தை கொடுத்து அனுப்பியுள்ளனர். இதன் பின்னர் சிறுமி தனது பெற்றோரிடம் விடயத்தை கூறி பெற்றோரையும் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று பெற்றோர் பார்த்த போது இருவரும் வீட்டினுள் மறைந்திருந்துள்ளனர். இதனையடுத்து உடனடியாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர் அல்லைப்பிட்டியில் உணவு விடுதியொன்றை நடாத்தி வருவதாகவும் ஜேர்மன் நாட்டில் 40 வருடங்களாக வாழ்ந்து வருவதாகவும் வருடத்திற்கு ஒருமுறை இலங்கை வந்து செல்வதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்தார். 

 இதேவேளை கைது செய்யப்பட்ட இருவரும் நிரம்பிய மது போதையில் காணப்பட்டதாகவும் குறித்த பகுதியில் தொடர்ச்சியாக வேறு பல பெண்களுடனும் சேட்டைகளில் ஈடுபட்டு வந்ததாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.