களுதாவளை களுவாஞ்சிகுடி பிரதேச இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் புதிய திட்டமே சதொச விற்பனை நிலையங்கள் !

நல்லாட்சி அரசாங்கத்தினால் நாட்டில் உள்ள சகல பிரதேசங்களிலும் மக்களின் நன்மை கருதி சதொச விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டு  வருகின்றன.

கைத்தொழில் வணிக அமைச்சின் ஏற்பாட்டில் களுவாஞ்சிகுடி பிரதேசத்தை அண்டிய மக்களின் நன்மைகருதி சதொச விற்பனை நிலையம் ஒன்று திறக்கப்படவுள்ளது.

இது பற்றி ஜக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதியின் அமைப்பாளரும் கைத்தொழில் வணிக அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகருமான  கோ.கணேசமூர்த்தி தெரிவிக்கையில்.
எமது பிரதேச மக்களின் நன்மைகருதி களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் சதொச விற்பனை நிலையம் ஒன்று திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாக குறிப்பிட்டார்.