சவுதி அரேபியாவில் பெண்களூக்கு எதிராக கடுமையான சட்டங்கள் கடைபிடிக்கபட்டு வௌகின்றன. அங்கு பெண்களு கார் ஓட்ட அனுமதி இல்லை. அங்கு பெண்கள் கால்பந்து போட்டியை பார்க்க அனுமதி கிடையாது. ஆனால் அதை ஒரு பெண் மீறிவிட்டார். ஜித்தா நகரில் அல்- ஜவ்காரா மைதானத்தில் ரியாத் நகரை சேர்ந்த அல்-சகாப் அணிக்கும் ஜித்தா நகரை சேர்ந்த அல்-எதிகேட் அணிக்கும் போட்டி ந்டந்தது. இந்த போட்டியில் ரியாத் அணி வெற்றி 1;0 என்ற கோல் கணக்கில் பெற்றது. கால்பந்துபோட்டி நடந்தது. இதை பார்க்க ஆண் போன்று மாறு வேட மிட்டு மைதானத்துக்குள் நுழைந்தார். அதற்கான டிக்கெட்டை ஆன்லைனில் எடுத்திருந்தார்.
மைதானத்துக்குள் ஒரு காலியான இருக்கை பகுதியில் அமர்ந்து போட் டியை ரசித்து பார்த்து கொண்டிருந்தார். அப்போது அருகே இருந்த ஒரு ஆண் நபர் அவரை அடையாளம் கண்டு பிடித்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் தடையை மீறி கால்பந்து மைதானத்துக்குள் நுழைந்து போட்டியை பார்த்த அந்த பெண்ணை கைது செய்தனர்.தற்போது அந்த பெண் கால்பந்து போட்டியை ரசித்து பார்த்த வீடியோ யூடியூ இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
இது போல் ஈரானிலும் கட்டுபாடும் உண்டு ஈரானில் கைபந்து போட்டியை பார்த்த 25 வயது பெண் ஒருவர் கைது செய்யபட்டு ஒருவருட சிறை தண்டனை அளிககப்பட்டது குறிப்பிட தக்கது