
இரண்டு வருடங்களுக்கு முன்பு அவருடைய சித்தியால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சென்னையை விட்டுப் புறப்பட்டு ஹைதராபாத்தில் தஞ்சமடைந்தார். சில நாட்களுக்கு முன் ஹைதராபாத்தில் உள்ள 'பப்' ஒன்றுக்கு தோழிகளுடன் குடிப்பதற்காகப் போயிருக்கிறார். போதையில் தோழிகளுடன் நடனமாட வேறு ஒரு இடத்திற்குப் போகும் போது வழியில் யாரோ அவரை தெரியாமல் மோதி விட, கெட்டக் கெட்ட வார்த்தைகளால் அவரிடம் சண்டை போட்டிருக்கிறார். அந்த சண்டை ஒரு கட்டத்தில் அதிகமாக பின்னர் போலீசை வரவழைத்திருக்கிறார்கள். அதன் பின்தான் சண்டை ஓய்ந்ததாம். ஆனால், நான்கெழுத்து நடிகை மீது ஏதாவது வழக்கு பதிவு செய்தார்களா என்பதுதான் இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை.