மொரட்டுவ, கொரல்லவெல்ல பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளார்.
நண்பிகள் சிலருடன் கடலில் குழிக்கச் சென்ற போது குறித்த மாணவி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மொரட்டுவ, கட்டுகுருந்த பிரதேசத்தில் வசிக்கக் கூடிய 16 வயது மாணவி ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
கடற்படையினர் மற்றும் பொலிஸார் பிரதேசவாசிகளுடன் இணைந்து காணாமல் போன மாணவியை தேடும் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.