பலாச்சோலை கிராமத்துக்கு புதிய பஸ் சேவை மக்களை மகிழ்ச்சியில் ஆட்திய கணேசமூர்த்தி ! ( படம்கள்)

போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பலாச்சோலை கிராமத்துக்கு புதிய பஸ் சேவை அண்மையில் ஜக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதியின் அமைப்பாளரும் அமைச்சின் இணைப்பாளருமாகிய கணேசமூர்தி அவர்களினால்  ஆரம்பித்து வைக்கப்பட்டது.



நீண்டகாலங்களாக படுவான்கரை பிரதேசத்திலுள்ள கிராமப்புறங்களில் உள்ள மக்கள்  போக்குவரத்துசெய்வதில் பல இடையூறுகளை எதிர்கொண்டு வந்தனர். பிரதேச மக்களின் வேண்டுதலுக்கு அமைய களுவாஞ்சிகுடியில் இருந்து சின்னவத்தை,காக்காச்சிவட்டை பலாச்சோலை போன்ற கிராமங்களுக்கு இந்த பஸ்சேவை ஆரம்பிக்கப்பட்டது.