தமிழரசுக் கட்சியின் முடிவு அரசியல் குழுவின் ஊடாக கூட்டமைப்பிடம் முன்வைக்கப்பட்ட பின்னரே இறுதி முடிவு! மாவை சேனாதிராஜா


   
இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் வவுனியா
இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள விருத்தினர் விடுதியில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை இடம்பெற்றது. அதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
தமிழரசுக்கட்சியின் செயற்குழு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் இன்றைய அரசியல் நிலை மற்றும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும் ஏனைய விடங்களையும் கலந்துரையாடியிருந்தோம்.
பல மாவட்டங்களிலும் இருந்து வந்த எமது உறுப்பினர்களின் அபிப்பிராயங்கள் எம்மால் கோரப்பட்டு கருத்து ஆராயும் கூட்டமாக இடம்பெற்றிருந்தது. உறுப்பினர்கள் தமது கருத்துக்களை தெரிவித்தனர்.
இதன் போது அவர்களது கருத்துக்கள் ஒருமித்ததாக இருந்தது. இன்று எட்டப்பட்ட இந்த கருத்துக்களை தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு ஆராய்ந்து  பொருத்தமான சிபாரிசை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமைக்கு கொடுக்கும். அதன் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் உரிய நேரத்தில் ஆராய்ந்து தீர்மானத்தை எடுக்கும் எடுக்கும் என்றார்