புதிய காத்தான்குடிப் பிரதேசத்திலுள்ள சாப்பாட்டுக்கடைகள், உணவகங்கள், ஹோட்டல்கள், கோழி இறைச்சி உதவாதமை கண்டுபிடிப்பு !

காத்தான்குடி நகரசபைப் பிரிவில் இன்று வெள்ளிக்கிழமை காலை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சோதனையின்போது, பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் மீட்கப்பட்டு அழிக்கப்பட்டதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

 புதிய காத்தான்குடிப் பிரதேசத்திலுள்ள சாப்பாட்டுக்கடைகள், உணவகங்கள், ஹோட்டல்கள், கோழி இறைச்சி விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது பாவனைக்கு உதவாத இறைச்சி, சமைக்கப்பட்ட கறிகள், ரொட்டிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக அவர்கள் கூறினர்.